இனப்பிரச்சனைக்கான தீர்வு – இன்றைய பேச்சுவார்தையில் நிபந்தனைகளை முன்வைக்க தீர்மானம்
7 view
இன்றையதினம் ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது சில நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் நடைபெற்ற பங்காளி கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் சில தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளுராட்சி தோர்தல் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.
The post இனப்பிரச்சனைக்கான தீர்வு – இன்றைய பேச்சுவார்தையில் நிபந்தனைகளை முன்வைக்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்பிரச்சனைக்கான தீர்வு – இன்றைய பேச்சுவார்தையில் நிபந்தனைகளை முன்வைக்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
