உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு!
7 view
உலக உணவுத்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட உணவுப்பாதுகாப்பு தொடர்பான ஆய்வை அடிப்படையாகக்கொண்டு உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையிலுள்ள குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் 37 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கு முகங்கொடுத்துள்ளன. அதன் காரணமாக அக்குடும்பங்கள் உணவு வேளையைத் தவிர்த்தல், உணவு உட்கொள்ளும் அளவைக் குறைத்தல் மற்றும் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகக் கடன்பெறல் போன்ற பலதரப்பட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சந்தை செயற்திறன் குறிகாட்டியின் பிரகாரம்…
The post உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
