உயிர் பயத்துடன் வாழும் பெண்கள் – அசமந்த போக்குடன் செயற்படும் அரச அதிகாரிகள்.!
6 view
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள 10 முகாம்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிலருக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடுகளை கட்டியுள்ள போதும் அவை வெடித்த நிலையில் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மயிலிட்டி பகுதியில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுக்கு கிடைத்த காணிகளில் பாதுகாப்பான வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். எனவே இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அவர்களை மீள்குடியேற்றம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post உயிர் பயத்துடன் வாழும் பெண்கள் – அசமந்த போக்குடன் செயற்படும் அரச அதிகாரிகள்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிர் பயத்துடன் வாழும் பெண்கள் – அசமந்த போக்குடன் செயற்படும் அரச அதிகாரிகள்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
