மலையக மக்களை புறக்கணித்ததன் நோக்கம் என்ன? – மனோ ஜனாதிபதியிடம் கேள்வி
6 view
இலங்கையிலுள்ள தேசிய இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மலையக கட்சிகளை அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்தாவிட்டால், சர்வக்கட்சி கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
The post மலையக மக்களை புறக்கணித்ததன் நோக்கம் என்ன? – மனோ ஜனாதிபதியிடம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்களை புறக்கணித்ததன் நோக்கம் என்ன? – மனோ ஜனாதிபதியிடம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
