2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேருக்கு நேர்ந்த சோகம்!
7 view
மத்திய செனகலில் உள்ள கஃப்ரின் நகருக்கு அருகே நேற்று இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் மேக்கி சால், நாளை முதல் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தார். அவர் ட்விட்டரில் கூறியதாவது: இந்த பயங்கரமான சாலை விபத்தால் நான் மிகவும் வருந்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 38 பேர் கொல்லப்பட்டதாக செனகல் அரசு வழக்கறிஞர் தனி அறிக்கையில் தெரிவித்தார். பொதுப் பயணிகளின் போக்குவரத்துக்காக நியமிக்கப்பட்ட பேருந்து, டயர் வெடித்ததைத் தொடர்ந்து அதன் பாதையை விட்டு வெளியேறி, எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது என்று அரசு வழக்கறிஞர் சேக் டியெங் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தார்.…
The post 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேருக்கு நேர்ந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேருக்கு நேர்ந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
