இலங்கையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரில் நான்கு பேர் அதிரடி கைது!
7 view
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலை பொலிஸ் நிலைய இலக்கம் 12க்கு உட்பட்ட தேலாய் மலை பகுதியில் சட்டவிரோதமாக வைர அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகவும் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முற்பகல் 10.00 மணியளவில் இந்த கைது இடம்பெற்றதாக அட்டன் குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான பிரேமலால் தெரிவித்தார். குறித்த பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பில் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்படி சுற்றிவளைப்பின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து கல் அகழ்வுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அனைவரும் பொகவந்தல பொலிஸ் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதேவேளை, பொகவானை தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல்…
The post இலங்கையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரில் நான்கு பேர் அதிரடி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரில் நான்கு பேர் அதிரடி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
