கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி – பாதிக்கப்படும் சிறு மீனவர்கள்! அமைச்சரின் செயற்பாட்டுக்கு கண்டனம்
6 view
கடலட்டைப் பண்ணைக்கு எதிராக கிராஞ்சியில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வரும் நிலையில், போராட்ட இடத்திற்கு முன்னாலே 83 மீனவர்களுக்கு கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி வழங்கிய நிகழ்வானது கண்டிக்கத்தக்கது. அரசின் முக்கிய அமைச்சராக இருப்பவர் இவ்வாறு செயற்படுவது வெறுப்புக்குரியதாகும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் தெரிவித்தார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு கிராஞ்சி கடலட்டை பண்ணைகள் தொடர்பான விடயம் பற்றி யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியளாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதியில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினை கடலட்டைப்பண்ணை உருவாக்கம். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தான்தோற்றித்தனமாக உருவாக்கப்படுவதால் அவர்களின் தொழில் மற்றும் தொழில்சார் விடயங்கள் பாதிப்படைகின்றது. கிராஞ்சியில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வரும் நிலையில் போராட்ட இடத்திற்கு முன்னாலே 83 மீனவர்களுக்கு கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி வழங்கிய நிகழ்வானது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக…
The post கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி – பாதிக்கப்படும் சிறு மீனவர்கள்! அமைச்சரின் செயற்பாட்டுக்கு கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி – பாதிக்கப்படும் சிறு மீனவர்கள்! அமைச்சரின் செயற்பாட்டுக்கு கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
