யாழில் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வு
8 view
மானிப்பாய் பிரதேச சபையினால் இயற்கை உரம் இலவசமாக வழங்கி வைப்பு இன்றையதினம் (08) மானிப்பாய் பிரதேச சபையினால், மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 400 பயனாளிகளுக்கு இயற்கை உரம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மலசலகூடத்திட்டடத்தை வழங்குவதற்கு கடிதங்களும் கையளிக்கப்பட்டது. மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாபிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் சபையின் தவிசாளர், வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
The post யாழில் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
