வடக்கில் புதிய கலாசாரம் தேவை! – உமா சந்திரா வலியுறுத்து
6 view
வடமாகாணத்திலே புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே உமா சந்திரா பிரகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதம் மாத்திரமல்ல அது பேச்சளவிலேயே அது உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டும் எனவும் புத்திஜீவிகள் அதிகமாக அரசியலுக்குள் உள்வாங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
The post வடக்கில் புதிய கலாசாரம் தேவை! – உமா சந்திரா வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் புதிய கலாசாரம் தேவை! – உமா சந்திரா வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
