இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு
17 view
இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடக சட்டத்தை போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவ்வாறான சட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து, சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், அதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் இலங்கைக்கு பொருத்தமான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் The post இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு…
The post இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
