புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது – இயக்குனர் சிவராஜ்!
8 view
தமிழின் அண்மைக்கால முழு நீளத் திரைப்படமான “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் ” திரைப்படம் தமக்கு பெருமளவு இலாபத்தை ஈட்டி தந்துள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஈழ சினிமா ஊடாக வருமானத்தை ஈட்ட முடியாது என பலரும் கருத்துக்களை முன் வைத்து வரும் நிலையில் , கடந்த வருடம் எம்மால் வெளியிடப்பட்ட “புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம்” திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது. மிக குறைந்த செலவில் திரைப்படத்தை எடுத்து , திரைக்கு கொண்டு வந்து , இன்றைய நிலையில் அது எமக்கு பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது. எமக்கான சந்தை திறந்தே உள்ளது. நாம் யாருக்காக படம் எடுக்கிறோம். அதனை எப்படி கொடுக்கிறோம் என்பதில்…
The post புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது – இயக்குனர் சிவராஜ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது – இயக்குனர் சிவராஜ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
