கிழக்கினை மீட்கப்போகின்றோம் என கூறி காணி அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு- ஞா.சிறிநேசன் குற்றச்சாட்டு!
6 view
கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு இன்று மண் அகழும் செயற்பாடும் காணி அபகரிப்பு செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்க அதிகாரிகள் இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் காணி அபகரிப்புக்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்நிலையில் மின்சக்திக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜயசேகர மின்கட்டணத்தை உடனடியாக அதிகரித்தேயாக வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் ஆடு, மாடுகள் போல் இருட்டில் வாழப் பழகிக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்.இதனை மறுபுறமாக நோக்கினால் செலவை அதிகரிக்கக் கூடிய விதத்தில் 12 புதிய அமைச்சுக்களை நியமிப்பதற்காக அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று 6 ஆளுநர்களை நியமிப்பதற்கான செயற்பாடும் முன்னெடுக்கப்படுகிறது. இப்போது பார்க்கின்றபோது மக்கள் வறுமையில் தள்ளாடுகின்ற நிலையில் அவர்களுக்கு மானியம் கொடுப்பதா? நிவாரணம் கொடுப்பதா? என்று சிந்திக்க…
The post கிழக்கினை மீட்கப்போகின்றோம் என கூறி காணி அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு- ஞா.சிறிநேசன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கினை மீட்கப்போகின்றோம் என கூறி காணி அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு- ஞா.சிறிநேசன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
