பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்துகின்ற முதலாவது நாடாக இலங்கை பதிவு!
6 view
பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்துகின்ற முதலாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டாலும் அவை எந்த சந்தர்ப்பத்திலும் உடனடியான செலவுகளுக்காக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த போதிய நிதியில்லாத காரணத்தினால், பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளதாகவும் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
The post பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்துகின்ற முதலாவது நாடாக இலங்கை பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்துகின்ற முதலாவது நாடாக இலங்கை பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
