யாழ்-தமிழகம் கப்பல் சேவை: வடமாகாணம் பொருளாதாரத்தில் முன்னேற கூடிய சாத்தியம்- வணிகர் கழக தலைவர் பெருமிதம்!
6 view
கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார். இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். * நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய- இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ம் திகதி வணிகர் கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார். *இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.…
The post யாழ்-தமிழகம் கப்பல் சேவை: வடமாகாணம் பொருளாதாரத்தில் முன்னேற கூடிய சாத்தியம்- வணிகர் கழக தலைவர் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்-தமிழகம் கப்பல் சேவை: வடமாகாணம் பொருளாதாரத்தில் முன்னேற கூடிய சாத்தியம்- வணிகர் கழக தலைவர் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
