நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு சிறந்த வெளியுறவுச் சேவை அவசியம் – ஜனாதிபதி!
18 view
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதரக சேவைக்காக செல்லும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 11 பேரை நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஏனைய வெளிநாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முதலில் சிறந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதும் இரண்டாவதாக நட்புறவைக் கட்டியெழுப்புவதும் தான் நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். பொருளாதாரத் திட்டமிடல், பாதுகாப்பு நோக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். இந்த நோக்கங்களை அடைவது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திர பிரதானிகளின் செயல்திறனிலே தங்கியுள்ளது. வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்த்து, அங்குள்ள இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோரின் அரசியல் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு …
The post நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு சிறந்த வெளியுறவுச் சேவை அவசியம் – ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு சிறந்த வெளியுறவுச் சேவை அவசியம் – ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
