உப்புச்சப்பற்ற அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்!
6 view
“இலங்கையில் நீண்டகாலமாகப் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும். அது வலுவான – நிரந்தர தீர்வாக இருக்க இருக்க வேண்டும். உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்திக்கும் போது வலியுறுத்தவுள்ளேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தீர்வுக்கான பேச்சில் எம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவோம். நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அவர்களின் விருப்பங்களை – கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையே ஜனாதிபதியிடம் கடந்த சந்திப்புகளில் முன்வைத்துள்ளோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை” – என்றும் சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டினார். “தமிழர் தீர்வுக்கான பயணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்படும்” என்றும் அவர் உறுதியளித்தார். இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்திப்பு ஒன்றுக்கு…
The post உப்புச்சப்பற்ற அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்புச்சப்பற்ற அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
