இலங்கையில் 72,000 தோடம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலை!
7 view
இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 3 கொள்கலன்களில் உள்ளட தோடம்பழங்களை, நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உட்பட சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு இந்த தோடம் பழங்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மூன்று கொள்கலன்களிலும் சுமார் 72,000 கிலோ தோடம் பழங்கள் உள்ளன. இதன் மொத்த பெறுமதி 72 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
The post இலங்கையில் 72,000 தோடம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 72,000 தோடம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
