உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை!
16 view
இலங்கையில் ஏற்பட்ட பாரிய சுற்றாடல் அழிவினால் 1882 இல் 83வீதமாக இருந்த வன அடர்த்தி 16 வீதமாக சுருங்கியுள்ளது. அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இறந்த யானைகளின் எண்ணிக்கை 395 என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு பல தடவைகள் குறிப்பிட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் பெரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது, ஒரு நாளைக்கு 65 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு முதல் நாட்டில் 5.3 வீத முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள திருகோணமடு வனப் பகுதியில் 1,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. வத்தேகம கெபிலித்த வனப் பகுதியின்…
The post உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
