திருமலையில் படுகொலை செய்யப்பட்ட எனது நண்பர்கள் – 16 வருடங்களாகியும் கிடைக்காத நீதி! ரஜீவ்காந்தின் உருக்கமான பேச்சு
15 view
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஐந்து இளைஞர்கள் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் குறித்து வடக்குகிழக்கு மக்களின் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஆற்றிய உரையில், அன்று இடம்பெற்ற சம்பவங்களை விபரித்ததுடன், மாணவர்களின் கொலைக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும், வைத்தியர் மனோகரனின் வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் எனவும், பொறுப்புக் கூறலை அரசு தட்டிக்கழிப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது, 2006 ம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி எனது நண்பர்கள் எந்த வித காரணமுமின்றி விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 18 வருடங்கள் ஒன்றாக இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நாங்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தோம், யுத்தம் இடம்பெறும் பகுதியில் இல்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், அங்கு நடந்தவைகளிற்கான சாட்சி நான். பிரேத அறையில் பெருமளவு குருதியுடன் நான் உடல்களை பார்த்தது அதுவே முதல் தடவை.…
The post திருமலையில் படுகொலை செய்யப்பட்ட எனது நண்பர்கள் – 16 வருடங்களாகியும் கிடைக்காத நீதி! ரஜீவ்காந்தின் உருக்கமான பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் படுகொலை செய்யப்பட்ட எனது நண்பர்கள் – 16 வருடங்களாகியும் கிடைக்காத நீதி! ரஜீவ்காந்தின் உருக்கமான பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
