'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மனிதாபிமான உதவிகள்!
7 view
புதுவருட தினத்தை முன்னிட்டு “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உதவித்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அமைப்பின் விசேட செயற்திட்டத்தில் ஒன்றாக, நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றது. அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.01.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 84 ஆவது இல்லமும், அதேவேளை SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 13 ஆவது இல்லமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது, இவ் இல்லமானது, மட்டக்களப்பு – மைலம்பாவெளி கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த குடும்பத்தினருக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை கமலநாதன் பாக்கியராஜா (SQM Founder) வழங்கியுள்ளார். மேலும், மட்டக்களப்பு – திராய்மடு கிராமத்தில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 20 குடும்பங்களுக்கு ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைப்பின் மூலம் அன்றைய தினம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. …
The post 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மனிதாபிமான உதவிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மனிதாபிமான உதவிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
