மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்-ராஜமணி பிரசாந் வேண்டுகோள்!
17 view
‘ நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே கொட்டகலை சுகாதார பிரிவில் சத்துணவு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.’ – என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும், இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை,நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று (04.01.2022) கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக 280 குடும்பங்கள் இனங்காணப்பட்டு, சுமார் 12 இலட்ச ரூபா செலவில் அவர்களுக்கான பொதிகள் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இன்றைய தினம் வழங்கப்பட்டது. அத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக…
The post மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்-ராஜமணி பிரசாந் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்-ராஜமணி பிரசாந் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
