மாற்றத்துக்காகப் போராடியவர்கள் தேர்தலுக்கு உடனே தயாராகுங்கள்-சாணக்கியன் எம்.பி அறைகூவல்!
6 view
மாற்றத்துக்காகப் போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு உடனடியாகத் தயாராக வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணயக் குழுவை சாணக்கியன் எம்.பி. இன்று சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மாற்றத்தைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தற்போது ஜனநாயக ரீதியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே, அவர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். அரசில் இருக்கும் ஒரு சிலர் தேர்தலுக்கு நிதி இல்லை எனச் சொல்லும் நொண்டி சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்குத் தயாராக…
The post மாற்றத்துக்காகப் போராடியவர்கள் தேர்தலுக்கு உடனே தயாராகுங்கள்-சாணக்கியன் எம்.பி அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாற்றத்துக்காகப் போராடியவர்கள் தேர்தலுக்கு உடனே தயாராகுங்கள்-சாணக்கியன் எம்.பி அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
