நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்திற்கு சிக்கல் ஏற்படும்- நிதி அமைச்சின் முக்கியஸ்தர் எச்சரிக்கை!
6 view
இவ்வருடம் அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் போகும் என நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அரிசியை கொள்வனவு செய்ய முடியாத பட்சத்தில் அரிசிச் சந்தை மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டிய பேச்சாளர், இந்த நிலையில் தனியாரால் மட்டும் அரிசியை கொள்வனவு செய்தால் அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார். பெரும்போகத்தின் போது எட்டு இலட்சம் ஹெக்டேர் அரிசி அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மூன்று மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். அதற்காக 2000 மில்லியன் ரூபா செலவழிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்தப் பணத்தை அரிசி கொள்வனவுக்குப் பயன்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன உரப் பாவனையை நிறுத்தியதையடுத்து அழிந்துபோன நெல் அறுவடை இம்முறை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நெல் உபரியாக…
The post நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்திற்கு சிக்கல் ஏற்படும்- நிதி அமைச்சின் முக்கியஸ்தர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்திற்கு சிக்கல் ஏற்படும்- நிதி அமைச்சின் முக்கியஸ்தர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
