பகலில் யாசகம் – இரவில் சுகபோக வாழ்க்கை! இலங்கையில் யாசகம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல்
7 view
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், நட்சத்திர தரத்திலான ஹோட்டல்களில் கூட உணவு உண்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. பிரதான வர்த்தக நிலையங்களுக்கு தேவையான இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், 100 ரூபாய் போன்ற நாணயத்தாள்களை யாசகர்களே வழங்கிவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், யாசகத்தை பிரதான தொழிலாக கொண்டு செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post பகலில் யாசகம் – இரவில் சுகபோக வாழ்க்கை! இலங்கையில் யாசகம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பகலில் யாசகம் – இரவில் சுகபோக வாழ்க்கை! இலங்கையில் யாசகம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
