திருமலை தோப்பூரில் மாடு அறுக்கும் மடுவத்திற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கை!
6 view
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – அப்ரார் நகர் கிராமத்தில் நேற்றையதினம் செவ்வாய்கிழமை பிரதேச மக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தோப்பூர் பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்தில் மாடு அறுப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் தமது கிராமத்தில் வசிக்க முடியாதுள்ளதாகவும் மாடு அறுக்கும் இவ் மடுவத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரியும் தோப்பூர் – அப்ரார் நகர் கிராம மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.ஏற்கனவே தோப்பூர் மாடு அறுக்கும் மடுவத்தில் மாடு அறுப்பதற்கு அப்ரார் நகர் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் ஒன்றரை மாதம் மாடு அறுப்பதை பிரதேச சபை தடைபண்ணியிருந்தது.இந்நிலையில் சுமார் ஒன்றரை மாதத்திற்கு பின்னர் நேற்றையதினம் மாடு அறுக்கும் மடுவத்திற்கு வருகை தந்தோர் அப்ரார் நகர் கிராம மக்களின் எதிர்ப்பினால் மாடு அறுக்காது திரும்பிச் சென்றனர்.குறித்த இடத்திற்கு மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக பொறுப்பதிகாரி எம்.எம்.றிஸ்வான் வருகை தந்தார்.இதனையடுத்து பொதுமக்கள் அவரோடு வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.அத்தோடு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.மேலும் நேற்றையதினம் பொதுமக்களின் எதிர்ப்பினால்…
The post திருமலை தோப்பூரில் மாடு அறுக்கும் மடுவத்திற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை தோப்பூரில் மாடு அறுக்கும் மடுவத்திற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
