கொழும்பு – யாழ்ப்பாண புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்- இரவீந்திரன்!
17 view
கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால், அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுபடுத்தினார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிற்கிடையேயான தண்டவாளப்பாதையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் ஜனவரி 5ம் திகதியிலிருந்து இப்பாதையினூடான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் – கொழும்பு இற்கிடையே யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கபபட்ட புகையிரத சேவைகள் யாவும் அனுராதபுரத்திலிருந்து ஆரம்பித்து கொழும்பு வரை தமது சேவையைத் தொடரும். அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை யாழ்ராணி புகையிரத சேவை இடம்பெறும். இதன்காரணமாக தலைமன்னார் – கொழும்பிற்கு இடையிலான புகையிரத சேவையும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் பயணிகள் பின்வரும் மூன்று வழிகளில் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும். 1.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை புகையிரதத்தில் சென்று பின்னர் வவுனியாவிலிருந்து…
The post கொழும்பு – யாழ்ப்பாண புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்- இரவீந்திரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு – யாழ்ப்பாண புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்- இரவீந்திரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
