நாட்டை மீண்டும் அழிக்க அனுமதிக்க மாட்டோம்! ரணிலின் சகா சூளுரை
7 view
சரிந்த நாட்டை ஜனாதிபதி மீட்டெடுக்கும் அதே வேளையில், ஒருவரது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார். சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் பெரும் தொகையை வார்த்து இந்த தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் மக்கள் விழுவார்கள் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார். நாட்டின் இளைஞர்கள் கோரிய முறைமை மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சிகள் அதற்கு வெளியில் சென்று பழைய வேலைத்திட்டத்தில் செயற்படுவதாக வஜிர அபிவர்தன தெரிவித்தார்.
The post நாட்டை மீண்டும் அழிக்க அனுமதிக்க மாட்டோம்! ரணிலின் சகா சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை மீண்டும் அழிக்க அனுமதிக்க மாட்டோம்! ரணிலின் சகா சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
