யாழில், நாய்கள் கடித்து குதறிய நிலையில், சிசு ஒன்றின் சடலம் மீட்பு!
16 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உடன் பிறந்த சிசு ஒன்றின் உடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மருதங்கேணி பொலீசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மிருதங்கேணி பொலீசாரால் தற்போது தீவிர விசாரணைகள் முடக்கி விடப்பட்டுபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி போலீசாருக்கு அறிவித்திருக்கின்றனர். இந் நிலையொல் குறித்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் போலீசார் குறித்த சிசுவை புதைத்தவர் அல்லது கொலை செய்தவர் என்று சந்தேகிக்கும் நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மிருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post யாழில், நாய்கள் கடித்து குதறிய நிலையில், சிசு ஒன்றின் சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், நாய்கள் கடித்து குதறிய நிலையில், சிசு ஒன்றின் சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
