கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது
1 view
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை அரசாங்கம் இந்தியாவிடம் பொறுப்பாக்கியுள்ளது. இது வெட்கக்கேடானது. அவ்வாறாயின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அனைவரும் இந்திய தூதுவரை சந்தித்து பிரச்சினைகளை குறிப்பிட வேண்டும். நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த பாதீட்டை தூக்கியெறிய வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
The post கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.