வவுனியாவில் ஆசிரியரின் வீட்டில் திருட்டு-வீட்டுப்பணிப்பெண் கைது!
6 view
வவுனியா மன்னார் வீதி இரண்டாம் கட்டைப்பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் தங்க நகைகள், பணம் என்பன திருட்டு போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் வைக்கப்பட்ட தங்க சங்கிலி, தோடு, ஐம்பதாயிரம் பணம் என்பன திருட்டுப்போயுள்ளது. கணவன், மனைவி இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளரான ஆசிரியரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவ்வீட்டில் பணியாற்றிய சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணை கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டபோது திருடப்பட்ட தங்க நகை, பணம் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
The post வவுனியாவில் ஆசிரியரின் வீட்டில் திருட்டு-வீட்டுப்பணிப்பெண் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் ஆசிரியரின் வீட்டில் திருட்டு-வீட்டுப்பணிப்பெண் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
