தன்னிச்சையான வருமான வரி – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் யாழ். மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
14 view
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தி இருக்கின்ற தன்னிச்சையான வருமான வரிக்கொள்கையை நீக்கி வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும் யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஊடக சந்திப்பை நடத்தியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கையில், இந்த வரிக்கொள்கையின் மூலம் வருடம் ஒன்றுக்கு இரண்டு மாதத்திற்கு மேற்பட்ட வேதனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் வைத்தியர்கள் இருக்கின்றனர். இது வைத்திய துறையை மட்டுமல்ல ஏனைய தொழிற்துறையையும் பாதித்துள்ளது. எவரையும் பாதிக்காத வகையில் வருமான வரிக்கொள்கை பாராளுமன்றம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 2022இல் வரிக்கொள்கையின் காரணமாக 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் மனிதவலு பற்றாக்குறையை வைத்தியதுறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் ஏற்படுத்தும் இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கும் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் வரிக்கொள்கை…
The post தன்னிச்சையான வருமான வரி – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் யாழ். மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தன்னிச்சையான வருமான வரி – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் யாழ். மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
