நாடு எந்த நிலையில் சென்றாலும் பரவாயில்லை, எங்களுக்கு அமைச்சு பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிலர்! – சுரேஷ் குற்றச்சாட்டு
9 view
நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருந்து கொண்டு இருக்கின்றது. நாடு எவ்வாறான நிலையில் சென்றாலும் பரவாயில்லை. தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், அமைச்சு பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஜனாதிபதி, ஏனையவர்கள் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டது போல் கடன் வாங்கிய நாடுகள் கடனை மீள செலுத்துவதற்கான காலம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அரசாங்கம் எதிர்பார்த்த கடன்கள் கூட இந்த ஜனவரி, பெப்பவரி மாதங்களில் கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றது. மின்சார அமைச்சு, மின்சார கட்டணத்தை மிக அதிகளவில் உயர்த்துவதாக கூறகின்றார்கள். ஏறத்தாழ 80 பில்லியன் ரூபாய்களை அறவீடு செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றார்கள். இதனால் அடிமட்ட மக்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட போகின்றார்கள். இலங்கையில் மிக மோசமான…
The post நாடு எந்த நிலையில் சென்றாலும் பரவாயில்லை, எங்களுக்கு அமைச்சு பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிலர்! – சுரேஷ் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு எந்த நிலையில் சென்றாலும் பரவாயில்லை, எங்களுக்கு அமைச்சு பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிலர்! – சுரேஷ் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
