பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் – ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு
6 view
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதயின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் – ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் – ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
