அரச ஊழியர்களின் பணி 8மணி நேரமாக மட்டுப்படுத்தப்படாது- புதுவருட கடமை ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி உரை!
6 view
இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 2023 புத்தாண்டில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுடன் இணைந்து இன்று(திங்கட்கிழமை) காலை தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்க முன்னர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன்பின்னர் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து, அரச பணிக்கான சத்தியப் பிரமாணத்தை செய்துகொண்டனர். பின்னர் அனைத்து ஊழியர்களுடனும் ஜனாதிபதி, தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டார். ஜனாதிபதி பணிக்குழாமின் ஊழியர்களுக்கு, ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்க முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி, ”அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், ஐந்தரை மாதங்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் ஒரு வரலாற்றுப் பணியை நாங்கள்…
The post அரச ஊழியர்களின் பணி 8மணி நேரமாக மட்டுப்படுத்தப்படாது- புதுவருட கடமை ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி உரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச ஊழியர்களின் பணி 8மணி நேரமாக மட்டுப்படுத்தப்படாது- புதுவருட கடமை ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி உரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
