புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் !!
7 view
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்த நிலையில், புத்தாண்டு தினத்திற்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு, ரஷ்யப் படைகள் கீவ் மற்றும் பிற நகரங்களில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, 20 ஏவுகணைத் தாக்குதல்களில் 12ஐ ரஷ்யா நேற்று சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் கடினமான ஆனால் அவசியமான முடிவு என்று கூறினார். அமைதி குறித்து மேற்கத்திய நாடுகள் பொய் கூறுவதாக குற்றம்சாட்டிய புதின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யாவை துண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். The post புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் !<br>! appeared…
The post புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் !! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் !! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
