புதுவருட இசை நிகழ்ச்சியில் அடிதடி! வவுனியாவில் இருவர் கைது
5 view
வவுனியா நகரசபை மைதானத்தில் இடமபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அடிதடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இசை நிகழ்வு ஒன்று இரவு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட இளைஞர் குழுக்களுக்குள் வாய்தர்க்கம் ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார் அடிதடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
The post புதுவருட இசை நிகழ்ச்சியில் அடிதடி! வவுனியாவில் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுவருட இசை நிகழ்ச்சியில் அடிதடி! வவுனியாவில் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
