அரசியல் தீர்வும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் – உருத்திரகுமாரன்!
11 view
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு எற்பாடுகளுடன் இறுகப் பிணைக்கப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையில் அடிப்படையிலும், ஈழத்தமிழ் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமையாத ஏற்பாடு எதுவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கிடையில் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு சிறிலங்கா அரச தலைவரால் வெளியிடப்பட்டமை சில மட்டங்களில் ஆரவாரங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிவதோடு, இது கேலிக்கும் நகைப்புக்கும் உரியதோர் அறிவிப்பு என்பதனை அரசியல் புரிந்தோர் அனைவரும் அறிவர் எனக் தனதறிக்கையில் குறிப்பிட்டு பிரதமர் வி.உருத்திரகுமாரன், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையினை எவ்வளவு தரம் தாழ்த்தி; வெளிப்படுத்தவே சிறிலங்கா அரசுத் தiலைவர் விரும்புகிறார்…
The post அரசியல் தீர்வும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் – உருத்திரகுமாரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் தீர்வும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் – உருத்திரகுமாரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
