கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்த தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்! புதுவருட தினத்தில் உறவுகள் போராட்டம்
10 view
புதுவருடதினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பகாக 2142 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் அவர்களது போராட்ட கொட்டகைக்கு முன்பாக இடம்பெற்றது. இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இறையாண்மையுடனான தீர்வே பாதிக்கப்பட்டோருக்கு தேவை என தெரிவித்து மாதிரி வாக்களிப்பையும் மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால்…
The post கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்த தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்! புதுவருட தினத்தில் உறவுகள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்த தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்! புதுவருட தினத்தில் உறவுகள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
