ஆபாச காணொளியை காட்டி 2 வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸார்! – யாழில் சம்பவம்
14 view
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த இரண்டு வருட காலமாக ஆபாச காணொளியை காட்டி, மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று, ஆட்களற்ற வீடொன்றினுள் வைத்து இருவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, அதனை காணொளியாக எடுத்து வைத்து, அதனை காட்டி, கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை இரண்டு உத்தியோகத்தர்களும் மிரட்டி, தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (டிச. 29) பாதிக்கப்பட்ட சிறுமி சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது. இதேவேளை…
The post ஆபாச காணொளியை காட்டி 2 வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸார்! – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆபாச காணொளியை காட்டி 2 வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸார்! – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
