வவுனியாவில் வீதி விபத்தினை குறைக்கும் நோக்குடன் சிரமதானப் பணி
16 view
வவுனியா ஒமந்தை அரச குடியிருப்பு பகுதியில் வீதி விபத்தினை குறைக்கும் நோக்குடன் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓமந்தை அரச குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கினை சூழவுள்ள பற்றைகளினால் வீதி தெளிவின்மையினால் வீதி விபத்துக்கள் எற்படுவதினை தடுக்கும் நோக்கில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் ஓமந்தை பொலிஸாரின் ஒத்துளைப்புடன் அப்பகுதியில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. ஜெ.சி.பி வாகனத்தின் உதவியுடன் பற்றைகள் அகற்றப்பட்டதுடன் குப்பைகளும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டன. இச் செயற்பாடு அப்பகுதி மக்களிடம் பாரிய வரவேற்பினை பெற்றிருந்ததுடன் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.
The post வவுனியாவில் வீதி விபத்தினை குறைக்கும் நோக்குடன் சிரமதானப் பணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் வீதி விபத்தினை குறைக்கும் நோக்குடன் சிரமதானப் பணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
