புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!
14 view
ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இந்தக் கோர விபத்து நீர்கொழும்பில் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்ற தாயும் மகளுமே விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீர்கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், 17 வயதுடைய மகளுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.அதேவேளை, ஓட்டோ சாரதியும், அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
