சட்டவாட்சிக்கான எங்கள் உறுதி மொழியை புதுப்பித்து நிலை நிறுத்துவோம் – ஜீவன் தியாகராஜா!

6 view
13ஆம் திருத்தத்தின் முழு நன்மையை அடையும் பொருட்டு சட்டவாட்சிக்கான எங்கள் உறுதி மொழியை புதுப்பித்து நிலை நிறுத்துவோம் என வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  மக்களின் வாழ்வில் அமைதியும் செழிப்பையும் போட்டு வைக்கும் ஆண்டாக மலரும் புத்தாண்டில் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவிக்கின்றேன். வடக்கு ஏழை மக்களின் காணி, வறுமையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தல்,  சிறப்பான சுகாதார பராமரிப்பு கல்விக்கான சேவைகள் உற்பட உட்கட்டமைப்பு வசதிகள் அனைவருக்கும் சிறந்த முறையில் கிடைக்க வேண்டும். மாகாண நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை வழங்க அவர்களின் வாசலுக்கு கொண்டு செல்லுதல், காணி பிணக்குகளை தீர்த்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை ஆதரித்துச் செயற்படும் சிந்தனைகளை மேலும் வளர்க்க வேண்டும்.  அகவை மலரும் புத்தாண்டில் மக்களுக்கான சேவையை வழங்குவதற்காக  மாகாணத்துக்கு வழங்கப்பட்ட13ஆம் திருத்தத்தின் முழு நன்மையையும் வழங்குவதில் சட்டவாட்சிக்கான எங்களின் உறுதிமொழியினை புதுப்பித்து நிலை நிறுத்துவோம் – என தெரிவித்தார்.
The post சட்டவாட்சிக்கான எங்கள் உறுதி மொழியை புதுப்பித்து நிலை நிறுத்துவோம் – ஜீவன் தியாகராஜா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース