சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறானதாம் – மாவை கூறுகின்றார்
6 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறானது என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதுள்ள நிலையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் வெளியில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடம் கேட்டபோது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகளைத் (தமிழரசு, ரெலோ, புளொட்) வேறு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டுக்குச் செல்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முடிவு எதுவும் எடுக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது,…
The post சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறானதாம் – மாவை கூறுகின்றார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறானதாம் – மாவை கூறுகின்றார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
