ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை! – இலங்கையில் நடந்த கொடூரச் சம்பவம்
11 view
மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேவேளை, பதல்கும்புர நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரு இடங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களையும் தேடி வருகின்றனர்.
The post ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை! – இலங்கையில் நடந்த கொடூரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை! – இலங்கையில் நடந்த கொடூரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
