இலங்கை வாழைப்பழங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
6 view
2023ஆம் ஆண்டு இலங்கையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சியாளர்கள் குழுவுடன் நேற்று அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார். பல நாடுகள் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு பெருமளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகவும், அதேவேளை நாட்டில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையின் தரத்தை பூர்த்தி செய்யத் தவறியமைக்கான முக்கிய காரணத்தை அமைச்சர் அமரவீர எடுத்துரைத்தார். எனவே, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதிகபட்ச வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, 2023 வரவு -செலவுத் திட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எள், பச்சை பீன்ஸ், சோயா பீன்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள்…
The post இலங்கை வாழைப்பழங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வாழைப்பழங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
