தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய தயாராகும் இலங்கை எம்.பியின் காளைகள்!
6 view
தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராகி வருகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வளர்க்கும் காளைகளும் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு அவற்றுக்கு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர் செந்தில் தொண்டமான். ஜல்லிக்கட்டு போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும். இந்த வீரமிகு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பராமரித்து வருகிறார் செந்தில் தொண்டமான். திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளிமாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார். இப்படி வளரும் இவரது காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றுவரை நடைபெற்ற எல்லா…
The post தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய தயாராகும் இலங்கை எம்.பியின் காளைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய தயாராகும் இலங்கை எம்.பியின் காளைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
