யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது! – வெளியான அறிவிப்பு
6 view
யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை (31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் யாழ்.மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்ததாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை’ என்று உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் குறிப்பிட்டார். இதனால் யாழ். மாநகரசபையை யார்…
The post யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
