வடக்கின் 5ஆவது மாகாணக் கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ்
6 view
வட மாகாணத்தின் ஐந்தாவது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.யோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு சென்றபின் ரிக் கல்லுரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ் பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராக செயற்பட்டார். பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம் ,மடு துணுக்காய், கிளிநெச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராகச் செயற்பட்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகிய வற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது வட மாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்
The post வடக்கின் 5ஆவது மாகாணக் கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கின் 5ஆவது மாகாணக் கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
