பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம்!
12 view
பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வீதிகளில் பாடசாலை மாணவர்களை சோதனையிடுவதையும், காணொளி பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
The post பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
