விடுதலைப்புலிகளை மீளுருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் உதவி? விசாரணையை முன்னெடுக்கும் இந்தியா!
6 view
பாகிஸ்தானிய உளவுப்பிரிவான இன்டர் சேவிஸஸ் இன்டலிஜனட் (Inter-Services Intelligence) என்ற ஐ.எஸ்.ஐ அமைப்பினர் தமிழ் தேசியத்தை பயன்படுத்தி மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் செயற்பட வைக்க முயற்சிப்பதாக இந்திய புலனாய்வுத்துறை நம்புகிறது. இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை, தமிழகம் மற்றும் இலங்கையில் வலுப்படுத்த ஐஎஸ்ஐ முயற்சிப்பதாகவும் நெசனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்சி(National Investigation Agency) என்ற இந்திய புலனாய்வு சேவை கருதுவதாக தெ பெடரல் செய்தித்தளம் தெரிவிக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்குவதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி,அண்மையில், தமிழகம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ் ஏதிகளுக்கான முகாமில் இருந்து 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கும், பாகிஸ்தானின் போதைப்பொருள் முக்கியஸ்தர் ஹாஜி சலீமின் உதவியுடன் ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து கேரளா கொல்லம் கடற்பரப்பின் ஊடாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தி வந்ததாக கூறி, கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக இந்திய புலனாய்வுச்சேவை கண்டறிந்தது. இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின்…
The post விடுதலைப்புலிகளை மீளுருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் உதவி? விசாரணையை முன்னெடுக்கும் இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுதலைப்புலிகளை மீளுருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் உதவி? விசாரணையை முன்னெடுக்கும் இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
